வவுனியாவில் மேலும் 84 பேருக்கு கொரோனா!

வவுனியாவில் மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (12) வெளியாகின.

இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியோரை சுயதனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.