இரவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கான இதுவே காரணம்!

இன்று (16) முதல் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாக குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத தெரண பிக் போகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.