வவுனியாவில் கோரா தாண்டவமாடும் கொரோனா!

வவுனியாவில் மேலும் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (20) இரவு வெளியாகின.

அதில் vவவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் ஒரு தொகுதி இன்று காலை வெளியிடப்பட்டிருந்த போது 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தார்கள்.

இதேவேளை வவுனியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ்தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ற்கும் அதிகமாக சடுதியாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.