திருகோணமலையில் கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு…!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட கைக்குண்டு வெடித்ததில் சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தோப்பூர் செல்வ நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

ஆட்டுக்கு செடிக் கொடிகள் வெட்டச்சென்ற சிறுவனே இதில் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.