அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலீஸ் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று (24-12-2021) இரவு பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்த நிலையில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டில் நவீனன் என்ற இளம் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் புகைப்படத்தை தாமோதரம் பிரதீவன் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்