கொழும்பு துறைமுகத்தின் நிர்மாண பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது….!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாண பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இன்று புதன்கிழமை (12-01-2022) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி பணிகளை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன (Rohitha Abeygunawardena) கூறினார்.

மேலும் உலகளாவிய ரீதியில் பிரபல்யமான துறைமுகங்களின் தரவரிசை பட்டியில் இலங்கை 23 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2035 ஆம் ஆண்டை அடையும் போது கொழும்பு துறைமுகத்தை ஏராளமான கொள்கலன்களை கையாளும் பிரபல்யமான துறைமுகமாக மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன ((Rohitha Abeygunawardena) ) தெரிவித்தார்.