திருமண வைபவத்தின் போது குடும்பத்தாருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது மாமனாரை கொலை செய்த மருமகன்…..!

வீரஹெல பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் மருமகனின் தாக்குதலுக்கு உள்ளாகிய மாமனார் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்படட நபர் கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த தாக்குதலில் 54 வயதுடைய லுணுகம்வெஹெர பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற திருமண வைபவத்தின் போது குடும்பத்தாருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது, கொலை செய்யப்பட்ட நபரின் மூத்த மகளின் கணவனால் இவ்வாறு தாக்குதல்கள மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளங்காணப்பட்டுள்ள போதிலும், அவர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலை மறைவாகியுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.