புத்தள தேவாலயம் ஒன்றில் பழைமை வாய்ந்த மயானம் கண்டுபிடிப்பு!

புத்தளத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து பழைமை வாய்ந்த மயானமொன்றின் வடுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்று (17-01-2022) புத்தளம் − வென்னப்புவ − போலவத்த கிறிஸ்தவ தேவாலயத்தில் நிர்மாணப் பணிக்காக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்போது, நிர்மாணப் பணிகளை மேற்கொண்டவர்களுக்கு சடலம் ஒன்று புதைக்கப்பட்டமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலம் எந்த காலப் பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அந்த தேவாலயத்தின் பாதிரியார் தெரிவிக்கின்றார்.

எவ்வாறாயினும், இந்த மயான வடுக்களானது, கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.