மட்டக்களப்பில் வீட்டில் உள்ள நகைகாக மூதாட்டியை கொலை செய்த திருடன்….!


மட்டக்களப்பு சாய்ந்தமருது பிரதேசத்தில் 85 வயதான மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கொலை சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுக்கலாம் என கூறப்படுகின்றது.

சம்பவத்தில் புதுப்பள்ளி வீதி, சாய்ந்தமருது-15 இல் தனியாக வசித்துவரும் சுலைமான் செய்யது புஹாரி எனப்படும் 85 வயதை உடைய ஒரு பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

ஆறு ஆண் பிள்ளைகளின் தாயாரான குறித்த மூதாட்டி வீட்டில் நேற்றிரவு நுழைந்த கொலைகாரன் அவரை தாக்கி கொலைசெய்துவிட்டு அவரிடமிருந்த நகைகளை திருடிச்சென்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இன்றுகாலை மூதாட்டியின் நான்காவது மகன் வழமைபோன்று காலை உணவை வழங்க தாயாரின் வீட்டிற்கு சென்ற நிலையில் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.