தென்னிலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய ஆசாமி – வெளியான அதிர்ச்சித் தகவல்….!


இலங்கையின் தென்னிலங்கைப் பகுதியில் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு உதவுவது போன்று நடித்து பல பெண்களை ஏமாற்றிய நபர் ஒருவர் செய்தி வெளியாகியுள்ளது.

பிரியங்க எனப்படும் நபர் பேஸ்புக்கில் தனது உதவிகள் தொடர்பில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

எனினும் அதன் பின்னர் பேஸ்புக்கில் பெண்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பி அவர்களை ஏமாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய பல பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பேஸ்புக் பக்கங்களில் வைரலாகியுள்ளது.

அத்துடன் அந்த நபரின் குறுந்தகவல்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் ஆதாரங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.