யாழில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிலுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா வயது 42 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி காணாமல் போயுள்ளார் என உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.