நாட்டில் மீண்டும் முக்கிய பொருளின் விலை அதிகரிப்பு : தொடர்ந்து அவதியுறும் பொதுமக்கள்!

தற்போது நாட்டில் தேயிலையின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

260 ரூபாவை ஒரு கிலோகிராம் தேயிலை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

ரூபாவுக்கு நிகரான டொலரின் விலை அதிகரிப்பினால் தேயிலை விவசாயிகள் நன்மையடைந்துள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேயிலை தூள் 100 முதல் 130 ரூபாய் வரை விலை போனதாக அவர் கூறியுள்ளார்.