கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு!

கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளையில் அலையில் சிக்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த 26 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளதையடுத்த நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் பெரிய நீலாவணை 1 பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இராசநாயகம் சனுஜன் என்ற மாணவன் என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் அவரின் நண்பர்களுடன் கடலில் குளிக்கும் வேளையில் கடல் அலை அவரகளை இழுத்துச்சென்றுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்த சிறுவன் தவிர்த்து மற்றவர்கள் பாதுகாப்பாக கரை ஏறியுள்ளார்கள்.

இவ்வாறு காணாமல் போன சிறுவனின் சடலம் மிகுந்த தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.

சடலம் உடல்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.