வவுனியாவில் 2009வது நாளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஆர்ப்பாட்டம்!!

கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கோரி நாம் வீதியில் இறங்கி 2009 ஆகிவிட்டது. சர்வதேச தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா ஏ9 வீதியிலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2009 ஆம் ஆண்டு முதல் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மார்களினால் இன்று (21.08.2022) பிற்பகல் தமது போராட்ட தளத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் கூறுகையில், ‘2009ல் நடந்த இனப் போரில் 146 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர். 50 ஆயிரம் குழந்தைகள் ஆதரவற்றோர் ஆனார்கள்.

25 ஆயிரம் தமிழர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டனர். இதற்கு நீதி வேண்டும். இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் தலையிட்டு எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கைகளை உயர்த்தி ‘முருகா கருணை காட்டுங்கள்’ என்று கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியதோடு காணாமல் போன உறவினர்களின் புகைப்படங்களையும் ஏந்தியிருந்தனர்.