வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவுக்கு ஏலம் போன மூன்று மாம்பழங்கள்!

வவுனியாவில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்கள் மற்றும் மாலை ஒன்று ஏலம் விடப்பட்ட நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மரக்காரம்பளை வீதி, கணேசபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்காரத் திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழா நேற்று 21ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, ​​இறைவனுக்கு காணிக்கையாக வைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும், மாலைகளும் ஏலம் விடப்பட்டன. கடும் போட்டிக்கு மத்தியில் சபரிராஜன் என்ற மாணவர் அவற்றை ஒரு மில்லியன் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.

கிராமப்புற கோவிலில் மாம்பழம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போன சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, ஏலத்தில் கிடைக்கும் பணம், கோவில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.