யாழில் தீயில் எரிந்த நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு! விசாரணையில் வெளியான தகவல்

யாழ். வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை – நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கை சேர்ந்த சரவணபவ ரஞ்சித்குமார் (வயது 30) மற்றும் அவரது மனைவி கிருஷாந்தினி (வயது 26) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தம்பதியர் உறங்கிக் கொண்டிருந்த அறையில் தீ பரவியதை வீட்டுப் பணிப்பெண் அவதானித்த போது, ​​அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.