எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

எரிபொருள் இருப்பு ஒன்றரை மாதங்களுக்கு நீடிக்கும் என பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக டீசல் மற்றும் பெட்ரோல் இருப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 40,000 மெற்றிக் தொன் எடை கொண்ட டீசல் நேற்று இறக்கப்பட்டு செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு டீசல் மற்றும் பெற்றோல் தாங்கிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால் எரிபொருள் இருப்பு நிர்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும், இந்தியன் ஆயில் நிறுவனமும் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.