கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் வேலை செய்த முதியவர் ஒருவர் உடல்கருகி பலி!

மிரிஹான அத்துல்கோட்டே சந்தியில் இன்று காலை கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும்
கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லக்ஷ்மன் சரத் குமார் என்ற 63 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடையினுள் உறங்கிக் கொண்டிருந்த போது தீ பரவியதாகவும்
அவர் உறங்கிக் கொண்டிருந்த இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் அப்பகுதியில் உள்ள கடைகளில் கூலித் தொழிலாளியாக
பணிபுரிந்து வருவதாகவும் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்
கடை உரிமையாளர் அவருக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்துள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் சுருளால் ஏற்பட்டதா அல்லது மின் கசிவால் ஏற்பட்டதா
என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த தீ விபத்தால்
கடை முற்றிலும் எரிந்து நாசமானது, நஷ்டம் இன்னும் கணக்கிடப்படவில்லை.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, கோட்டே நகர சபையின் தீயணைப்புத் துறையினர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும்,
மின் இணைப்பை துண்டிக்க மின் வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.