அடித்துக் கொல்லப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை ; வெளியான காரணம்!

இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வாக்குவாதத்தில் வந்த சண்டையில் அடித்துக் கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நொச்சியாகம யாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக தந்தையும் மகனும் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதான அத்தே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த இரு சந்தேக நபர்களையும் ராஜாங்கனி பொலிசார் கைது செய்துள்ளனர்.