காட்டு யானை தாக்கி வனவிலங்கு அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் உடவளை யானைகள் சரணாலயத்தில் கடமையாற்றிய வனஜீவராசிகள் அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இன்று (07-11-2022) காலை காட்டு யானைகளுக்கு உணவளிக்கச் சென்ற வனவிலங்கு அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டார்.
காயமடைந்த அதிகாரி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரி பானடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.