இலங்கையில் இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாய்!

தாயொருவர் தனது இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து உயிரிழந்த நிலையில் மூவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா லொலுவாகொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மூவரும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் எட்டு வயது மகளும் ஐந்து வயது மகனும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழந்தைகளின் தந்தை ஒடுபாசி தொழிலாளி என்றும் குடும்ப தகராறு காரணமாக இது நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Previous articleகிளிநொச்சியில் பேருந்தில் மோசமான செயலில் ஈடுபட்ட மூன்று பெண்கள்!
Next articleவவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!