முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
காதல் விவகாரம் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்தில் முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 63 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை குருநாகல் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாலை உயிரிழந்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்தது.
அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது உறவினர் யுவதியை காதலித்து வந்த நிலையில், இருதரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்தில் முடிந்தது.
சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.