இத்தாலியில் இருந்து வந்தவர்களின் வாகனம் மீது காட்டு யானைத் தாக்குதல் !

இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் பயணித்த வாகனத்தை காட்டு யானை தாக்கியுள்ளது.

ரந்தேனிகல பெனிகெல என்ற பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தாலியை சேர்ந்த ஆணும் பெண்ணும் பயணித்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாகனம் கவிழ்ந்து விழுந்தாலும் அதில் பயணித்த இத்தாலிய தம்பதிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

சகல பிரதேசங்களுக்கும் சென்றுவிட்டு கண்டி நோக்கி பயணித்த போது நடுவில் காட்டு யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.