மின் வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவித்தல்!

நாட்டில் மின்வெட்டை இடைநிறுத்தாது வழங்க எரிபொருள் கொள்வனவிற்கு மட்டும் 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன் தலைவர் நலிந்த இளங்கோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சை இடம் பெறும் நேரம் பகலில் இது வரை மின்வெட்டு இடம்பெறவில்லை எனவும் அப்படி மின் தடைபட்டால் அது அவசர தேவைகளுக்காகவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இரவில் வழமை போன்று மின்வெட்டு இடம்பெறும் எனவும் கூறியுள்ளார்