சட்டவிரோத பயணம் மேற்கொண்ட இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லும் முற்சியில் ஈடுபட்டு ரீயூனியன்தீவில் இருந்த 38 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் டிசம்பர் முதலாம் திகதி அன்று நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகின் மூலம் ஐந்து பேருடன் புறப்பட்டதாகவும் அதன் பின்னர் 13 -14ம் திகதிகளில் புத்தளத்திலிருந்து 64 குடியேற்றவாசிகள் அவர்களுடன் படகில் ஏற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சட்டவிரோத பயணம் மேற்கொண்ட இவர்களை டியோகார்சியாவில் வைத்து  பிரிட்டனின் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். நாடு கடத்தப்பட்டவர்கள் சிஐடியினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இவ்வாறு சென்றவர்களிடம் கல்பிட்டி கண்டியை சேர்ந்த ஆள்கடத்தல்காரர்கள் தலா 400,000 முதல் 1000 00 வரை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.