மின்வெட்டு தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை!

நாட்டில். உயர்தரப் பரீட்சை நடைபெறும் 26-01-2023 முதல் 17-02-2023 வரையான காலப்பகுதியில் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அனுமதியின்றி நுகர்வோர் மின்வெட்டுக்கு முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூல முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் – 0775687387 மின்னஞ்சல் – [email protected] தொலைநகல் 0112392641