வசந்த முதலிகே விடுதலை செய்யப்பட்டார்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வசந்த முதலிகே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அவருக்கு பொருந்தமானதல்ல என பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் தெரிவித்தார்.

அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் விதிகளை முறையற்ற முறையில் பயன்படுத்துவதற்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு ஏற்ப்படுத்தியுள்ளது என நீதிவான் மேலும் குறிப்பிட்டுள்ளார்.