மதுபோதையில் இருந்த பிக்குகள் கைது!

மது போதையில் கண்டி மத்திய நகரில் பிக்கு அடையாள அட்டையுடன் இருந்த ஆறு நபர்களை [பொலிசார் கைது செய்துள்ளனர. பிரதான நகரில் இவர்கள் மது போதையில் நின்ற வேளைஅவர்களின் அடையாளத்தை பொலிசார் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அடையாள அட்டைகளை கேட்ட போது வழங்க மறுத்துள்ளனர்.

அதனால் அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பொலிசார் விசாரணை மேற்கொண்டனர் பொலிசாரின் விசாரணையின் போது அவர்கள் பல்கலைக்கழகங்களில் கற்ற மற்றும் பல விகாரைகளில் பணிபுரியும் பிக்குகள் எனவும் தெரிய வந்துள்ளது அத்துடன்  இக்குழுவினர் பேராதனை மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இவர்கள் மேலங்கிகளைக் கழற்றிவிட்டு காற்சட்டை மற்றும் சேர்ட் அணிந்து கண்டி நகருக்கு வந்ததாகவும் விசாரணையின் போது தெரிய வருகின்றது.மேலும் சம்பவம் அந்தந்த விகாரைகளுக்கு பொறுப்பான ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்