நாட்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டில் அறிமுகப்படுத்த இருக்கும்  டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில்  மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளதாவது நாட்டில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டுவர உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சாரதி அனுமதி பத்திரத்தை தமது கையடக்க தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள இயலும் இந்த புதிய சாரதி பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதன் தரவுகள் அனைத்தும் சேமிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.