கிளிநொச்சியில் வீடு திரும்பிய மனைவி பிள்ளைகளுக்கு காத்திருந்த சோகம் ! சடலமாக மீட்கப்பட்ட தந்தை !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (11-02-2023) வேலை முடிந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் இன்று (12-02-2023) சடலமாக அந்நபர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது மனைவி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டிற்கு சென்றபோது வீட்டில் தனியாக இறந்து கிடந்தார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேதிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.