விடுமுறை நாளில் சுற்றுலா சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நடந்த சோகம் ! 04 பேர் பலி !

மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 பேர் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12-02-2023) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 40வது வேட்டை கங்கனியார் குளத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் களுவுந்தன் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுக்குட்பட்ட டி.சஜிதன், எஸ்.தனு, வி.விதுசன் ஆகிய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

களுவுந்தன் பொதுத் தமிழ் கலவன் பாடசாலையில் கல்விப் பொதுத் தராதரத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்களும், 4 மாணவிகளும் மற்றும் ஆசிரியர் ஒருவருடன் 8 பேர் இணைந்து தாந்தாமலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.