களுத்துறை – பேருவளை, மொல்லியமலை பகுதியில் கடந்த 1ஆம் திகதி காணாமல் போன 24 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் இன்று (04) காலை பேருவளை கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த யுவதியின் மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
இந்நிலையில், மரண விசாரணை அதிகாரி வரும் வரை யுவதியின் சடலம் கொண்டுவரப்பட்டு படகில் வைக்கப்பட்டது.