நிறைவுக்கு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் நாளை  (16) காலை 8 மணியுடன் நிறைவு செய்வதாக  தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தங்களது கோரிக்கை தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்க் கொள்ளப்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் இது குறித்து தெளிவுபடுத்துவதற்க்காக நடாத்தப்பட்ட ஊடகவியாளர் சந்திப்பிலே தொழிற்சங்க கூட்டமைப்பு இவ்வாறு கூறியுள்ளது