பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் பணி நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூலை 4 ஆம் திகதி வரை 18 நகரங்களை மையமாக வைத்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள பாடசாலைகளை ஓரளவுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் உயர்தர ஆங்கில வழி விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.