வீடொன்றினுள் இரத்தம் வடிந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

வெலிவேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றினுள் இரத்தம் வழிந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெலிவேரிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 68 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிவான் விசாரணைகளையடுத்து சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.