கப்பலில் பணியாற்றிய கடற்படை அதிகாரி தற்கொலை!

கடற்படை கப்பலில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கடற்படை கப்பலான விஜயபாகுவில் நேற்று (14) கப்பலிலே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் 44 வயதுடைய அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.