வெள்ளவத்தையில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் படுகாயம்!

வெள்ளவத்தையில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

வெள்ளவத்தை மரைன்டிரைவ் பகுதியில் இன்று காலை 7.35 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த காருடன், எதிரே வந்த காரொன்று மோதியதை தொடர்ந்து லொறியொன்றுடனும் மோதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

காயமடைந்த நபர்

தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் காரை செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.