காதலை நிராகரித்த யுவதிக்கு நிகழ்ந்த கொடூரம்!

 காதல் அழைப்பை நிராகரித்த கோபத்தில் வீடு புகுந்து திருமணமான பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவரை திருகோணமலை- குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை இருவரும், வீட்டிற்குள் நுழைந்து கணவரை தாக்கி, பெண்ணை வன்புணர்வு செய்து, பின்னர் அவரிடம் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.