யாழ் தையிட்டியில் போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுப்பு!

தையிட்டியில் இராணுவத்தினரால் தனியார் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்ட விரோதமான முறையில் விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சட்ட விரோத கட்டுமானத்தை எதிர்த்தும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (2) மற்றும் நாளை (3) ஆகிய இரு தினங்களில் நடைபெறவுள்ளது.

அதன்படி ஞாயிறு (2) பிற்பகல் 3 மணிக்கு தையிட்டி விகாரைக்கு அண்மையில் போராட்டம் நடத்தவென நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்றுகூடுமாறு பொது மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.