கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழப்பு!

மல்வானை – வல்கம பிரதேசத்தில் உள்ள  வீடொன்றிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.  

கே.பி. திமாஷி ஜனித்மா மதுஷங்க என்ற சிறுமியே இதன்போது உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது சிறுமியின் தாய் வீட்டில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.