கிங் கங்கையில் வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை விடுப்பு!

கிங் கங்கையின் மேல் நீரேந்தும் பகுதிகளில் பெய்துவரும் அடை மழையினால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்ட அறிவிப்பை வெளியிட்டு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

வெலிவிட்டிய – திவித்துர, பத்தேகம, நியாகம, நெலுவ, தவலம, அக்மீமன, நாகொட, எல்பிட்டிய மற்றும் போப்பே பொத்தல ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  கங்கையின் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.