பேருந்தில் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அதிசொகுசு பேரூந்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்ற நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பகுதியில் நேற்று (22) இரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பினை சேர்ந்தவர்களின் குறித்த பஸ் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போது கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.