புறக்கோட்டை  தீ விபத்து – 22 வயது யுவதி பலி!

புறக்கோட்டை பகுதியில் உள்ள விற்பனை நிலையமொன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தீயில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதி என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 27ஆம் திகதி புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.