புலமைப்பரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள்

இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி, நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 05 மாணவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் 198 புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருடம் வெட்டுப்புள்ளியை தாண்டிய மாணவர்களின் சதவீதம் 15.22% என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இது  14.64 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.