இலங்கை நீதிமன்றங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

  நாட்டில் நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ  தெரிவித்தார்.

நீதிமன்றம் என்பது பயத்துடனும் சந்தேகத்துடனும் செல்லும் இடமல்ல என்றும் தெரிவித்த நீதி அமைச்சர், நீதிமன்றத்தின் முன் சாட்சியமளிக்கும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

 ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும்

அதோடு சாட்சிகள் நீதித்துறை செயல்பாட்டில் உதவும் குடிமக்கள். எனவே கூண்டில் இருந்து சாட்சியமளிக்கும் கூண்டு முறை மாற்றப்பட்டு, கண்ணியமான முறையில் சாட்சியம் அளிக்கும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் எனவும் நீதியமைச்சர் தெரிவித்தார்.

நேற்று (30)  நீதி அமைச்சில் நீதிமன்ற முறைமைக்கு அட்டை கொடுப்பனவு முறையை அறிமுகப்படுத்துவதற்கான உடன்படிக்கையை மக்கள் வங்கியுடன் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்து கொண்போதே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.