உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்!

2022 க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு அவர்களின் பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறி குறித்து இன்று (01) குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.