முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு பதிவு!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏனைய விளையாட்டுகளின் அபிவிருத்திக்காக, தேசிய விளையாட்டு நிதியத்திற்கு வழங்கப்பட்ட பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தியே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.