அம்பாறை- கல்முனையில் நிலநடுக்கம் பதிவு!

  அம்பாறை மாவட்டம் கல்முனைக்கு அருகில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.

5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அதன்படி இன்று அதிகாலை 3:41 மணியளவில் கல்முனையில் இருந்து 51 கிலோ மீற்றர் தொலைவில், கடலுக்கு அடியில் 366.2 கிமீ ஆழத்தில்  5.1 ரிக்டர் அளவிலான   நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றது.

அதேசமயம் அதிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மேற்பரப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் இந்திய நிலநடுக்கவியல் மையம் (NCS) கூறியுள்ளது.