துப்பாக்கி வெடித்ததில் 15 வயது சிறுவன் காயம்!

வரகாபொல, அல்கம பிரதேசத்தில் துப்பாக்கி வெடித்ததில் 15 வயது சிறுவன் காயமடைந்துள்ளான்.

நேற்று (19) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வரக்காபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வரக்காபொல பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவன் ஒருவனே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.