A/L விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளை மீள்பார்வை செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதிச் அட்டைகளை மீள்பார்வை செய்யும் பணிகள் நேற்று (19) நிறைவடையத் திட்டமிடப்பட்டிருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நீங்கள் விண்ணப்பித்தது போல் பெயர் இருக்கிறதா? பாடங்கள் சரியா? மொழி மூலம் சரியா? பிறந்த திகதி சரியா? இதில் பிழை இருந்தால் அவகாசம் கொடுத்துள்ளோம். டிசம்பர் 22 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அதற்கான நேரம் உண்டு.

https://onlineexams.gov.lk/onlineapps/ என்ற இணையதளம் ஊடாக உங்கள் அனைத்து திருத்தங்களையும் செய்யலாம். அதன் பிரதியை பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.